அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுக்களை மிக்க நம்பிக்கையுடன் கொள்வனவு செய்து அதிர்ஷ்டசாலிகளாக மாறிய நாற்பத்தொன்பது போருக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2019.08.20 ஆந் திகதியன்று அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஒரு மாதத்தினுள் லக்கின அதிர்ஷ்டம் உருவாக்கிய சுப்பிரி வெற்றியாளர்கள் மூவருக்கான காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது.
அதன் போது லக்கின அதிர்ஷ்டம் 2577 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்ல ரூபா. 3,744,332 ஆன தொகையை வெற்றியீட்டிய புவக்பிடியவைச் சேர்ந்த திரு. எஸ். ஆனந்த அவர்களுக்கும், லக்கின அதிர்ஷ்டம் 2562 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 2,725,216 இனை வெற்றியீட்டிய தெல்கொடையைச் சேர்ந்த திரு. ஆர்.டீ.எஸ். குமார அவர்களுக்கும் மற்றும் லக்கின் அதிர்ஷ்டம் 2563 ஆம் வாரத்தின் சுப்பிரி ஜயமல்லத் தொகையான ரூபா. 2,000,000 வினை காங்கேசந்துரையைச் சேர்ந்த திரு.ஜீ. நிதுசன் அவர்களுக்குமான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பத்து இலட்சம் கொண்ட பணப் பரிசில்களை வென்ற வெற்றியாளர்கள் நாற்பத்தாறு பேருக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, அத கோடிபதி விசேட சீட்டிலுப்பு வாரத்தின் ஊடாக விகோ மோட்டார் வாகனத்தை வென்ற வெற்றியாளர் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வென்ற வெற்றியாளர்கள் மூவருக்குமான சாவிகள் வழங்கப்பட்டது.
இச் சந்தர்ப்பத்திற்காக அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்கள், செயற்பாட்டுப் பணிப்பாளர் திரு. எச்.ஆர். விமலசிரி அவர்கள் உட்பட ஏனைய அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...