வாரந்தம் சகல செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதி இடம்பெறுவதுடன் அதில் வெற்றிவாய்ப்பினைப் பெறாத சுப்பிரி ஜயமல்லத் தொகையை 2019 ஆகஸ்ட் மாதம் 02 ஆந் திகதி வெற்றிகாக இலுக்கப்படும் அபிவிருத்தி அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டு சுப்பிரி ஜயமல்லவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
இறுதியாக 2019 ஆகஸ்ட் மாதம் 02 ஆந் திகதிய வெற்றிக்காக சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டின் வெற்றியை, அதன் இறுதி சீட்டிலுப்புத் திகதி முதல் 06 மாதங்களினுள் பெற்றுக் கொள்வதற்கு வெற்றியாளர்களுக்கு இயலுமை காணப்படுகின்றது.
அதற்கிணங்க இதற்குப் பிறகு நியத ஜய லொத்தர் சீட்டு பாவனையில் இருந்த தினங்களுக்குப் பதிலாக ஜயோதா லொத்தர் சீட்டு செவ்வாய்க் கிழமையிலும் அபிவிருத்தி அதிர்ஷ்டச் சீட்டு வெள்ளிக் கிழமைகளிலும் வெற்றிவாய்ப்பிற்கான சீட்டிலுப்புக்கள் இடம்பெறும்.
இத் திருத்தங்களுக்கு ஏற்ப உமக்கு ஜயோதா லொத்தர் சீட்டினை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் அபிவிருத்தி அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டினை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
அதேபோன்று மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க அதிக வரவேற்பைப் பெற்ற லக்கின அதிர்ஷ்டம் ( ராஷி அதிர்ஷ்டம்) லொத்தர் சீட்டு 2019 ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி முதல் வாரத்தின் ஏழு நாட்களிலும் சீட்டிலுப்பினை மேற்கொள்ளப்படவுமுள்ளது.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...