அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக மற்றும் ஜயோதா லொத்தர்களினூடாக உருவாக்கப்பட்ட சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கு காசோலை வழங்கல் 2021.01.07ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது 'கோடிபதி கப்ருக" 652வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.87,991,625 பணத்தொகையினை வெற்றிபெற்ற அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.குமார பதிரணலாகே சுனில் அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.யூ.டி.எல்.தினேஷ் குமார் ஆவார்.
மேலும் ஜயோத 1717வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.57,138,276 பணத்தொகையினை வெற்றிபெற்ற கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த திரு.ஏ.ஜீ.பி.கொடிதுவக்கு அவர்களுக்கும் அதன்Nபுhது காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திருமதி.ரி.எம்.எஸ்.பி.மெணிகே ஆவார்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தவைர் திரு.அமித கமகே மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்பு நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் கைகோர்த்து ஒன்றிணைந்துள்ள அறிவிப்பாளர்களின் ஆற்றல்களைய...
அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட...
அபிவிருத்தி லொத்தர் சபையின் உயிர் நாடியாக விளங்கும் விற்பனை முகவர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களுக்கு இலவசமாக வைத்திய வசதிகளை வழங்கும் திட்டத் தொடரின் மூன்றாம் இலவச வைத்திய முகாம் கம்பஹ மாவட்டத்தில் 2019.08.14 ஆந் திகதியன்று நடாத்தப்பட்டது.