அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்துள்ள வட கிழக்கு லொத்தர் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டத்தினை உரித்தாக்கும் முகமாக வலம்புரி பெயரில் விசேட லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்த அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையெங்கும் அதிர்ஷ்டத்தின் செய்தியினை கொண்டுச் செல்லும் அபிவிருத்தி லொத்தர் சபை தமது வட கிழக்கு மக்களுக்காக அறிமுகப்படுத்தும் இவ் விசேட லொத்தரினை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வு 2022.09.06ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதிர்ஷ்டத்தின் வெற்றி நாதம் எனும் வலம்புரி விசேட லொத்தர் மூலம் இரண்டு மில்லியன் வரையிலான பணப்பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. மூன்று இலக்கங்களுடன் ராசி அடையாளம் பொருந்துமாயின் இருபது இலட்சம் பணப்பரிசும், மூன்று இலக்கங்கள் மட்டும் பொருந்துமாயின் ரூ.100,000 பணப்பரிசுகளும், இரண்டு இலக்கங்கள் பொருந்துமாயின் 500 ரூபாய் பணப்பரிசும், யாதாயினும் ஒரு இலக்கம் அல்லது ராசி அடையாளம் பொருந்துமாயின் 50 ரூபாய் பரிசுகள் பலவற்றையும் வெல்ல முடியும்.
வருகின்ற ஒக்டோபர் மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ள வலம்புரி விசேட லொத்தரின் சீட்டிழுப்பு ஊடாக பரிசுக் கடலில் தமது அதிர்ஷ்டத்தினை தேடிச் செல்ல தற்போது வட கிழக்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் அதற்காக இன்றே உங்களின் வலம்புரி லொத்தரினை கொள்வனவு செய்திடுங்கள்.
அபிவிருத்தி லொத்தர் சபையினால் கடந்த இரு மாத காலப்பகுதியினுள் இடம்பெற்ற சீட்டிலுப்புக்களின் ஊடாக உருவாக்கிய வெற்றியாளர்களுக்கிடையில் பத்து இலட்சத்துடைய மற்றும் அதனை விடக் கூடுதலான பணத் தொகையை வெற்றியீட்டியவர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2020.01.24...
வாழ்வை ஒளிமயமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபை இந்த சனவரி மாதம் 19 ஆந் திகதியன்று தனது 37 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடவுள்ளது. இலங்கை வாழ் மக்களுக்காக உயர் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி 1983 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆந் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் நிலையம் அன்றிலிரு...